
சிரிப்பு 01
ஆசிரியர்: ஏன் வீதியோரங்களில் மரங்களை நட்டிருக்கிறாங்க?
மாணவன்: றோட்டுக்கு நடுவில நட்டா போக்குவரத்துக்கு இடஞ்சலா இருக்குமெண்டுதான் சேர்.
சிரிப்பு 02
ஆசிரியர்: இதுக்கு விஞ்ஞான விளக்கம் சொல்லு
மாணவன்: சொல்லுங்க சேர்
ஆசிரியர்: கல்லை தூக்கி தண்ணில போட்டா அது ஏன் அமிழுது?
மாணவன்: அதுக்கு நீச்சல் தெரியா சேர்
சிரிப்பு 03
ஒருவர் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லா நிக்கு தெரியுமா மச்சான்?
ஒருவர் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லா நிக்கு தெரியுமா மச்சான்?
இன்னொருவர்: இது தெரியதா மச்சான் மற்ற கால தூக்குனா விழுந்திடும் எண்டுதான்.
சிரிப்பு 04
ஆசிரியர்: நான் கேக்குறாள் மட்டும் பதில் சொன்னா போதும்
மாணவர்கள்: பயத்தோடு...
ஆசிரியர்: சங்கர் சொல்லு,முதல் முதல் சந்திரமண்டலத்துல யாரு காலடி வச்ச எண்டு
சங்கர் : சத்தியாமா நான் இல்ல சேர்
சிரிப்பு 05
ஜோஜ்: எங்கட அப்பா இவளவு நாளும் றைவரா இருந்து ஒரு அக்சிடண்டும் படல்ல தெரியுமாடா?
ஆம்ஸ்றோங் : அப்பிடியா மச்சான்,என்ன வாகனம் மச்சான் ஓடினவர்
ஜோஜ்: றோட் றோளர்
சிரிப்பு 06
பேரன் : பாட்டி நான் சைக்கிள் ஓட்டத்துக்கு போய்ட்டு வாறன்
பாட்டி: (80 வயது பாட்டி கதைப்பது போல கற்பனை செய்க).பாத்து மெள்ளமா மெதுவா ஓடு மகன்,ஏலாட்டி பக்கத்து பொடியனுகளோட சோந்து ஓடு...
சிரிப்பு 07
டொக்டர் : உங்களுக்கு கொலஸ்ரோல் கூடிப்போச்சு..
நோயாளி : அத குறைக்க என்ன செய்யலாம் டொக்டர்
டொக்டர் :நீங்க ஆடு,மாடு சாப்பிடுறத உடனே நிப்பாட்டணும்
நோயாளி : அதுகள் சாப்பிடுறத நான் எப்பிடி டொக்டர் நிப்பாட்டுற

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக