
சில நாள் பழகியிருந்தாலும் பிடித்திருக்கிறதா என்று கேட்க
உன்னுள் புதைந்தே பல நாள் ஆகிவிட்டது என்று பதில் கூற
மறுத்தது பெண்மை
என் கண்கள் திறந்திருந்தாலும் மூடிக்கொண்டாலும் நீ
தெரிவாய் என்பதை மறந்து இமைகளால் பூட்டிக்கொண்டேன்
உன்னை உள்ளே வைத்து
என் நிலை புரியாமல் பார்க்கமாட்டாயா என்கிறாய் பாசமாக
என் விழிபேசும் மொழி விளங்கிவிடுமோ என்றபயம் ஒருபுறம்
உத்தரவின்றி பத்திரப்படுத்தியிருக்கும் என்
விழிச்சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிடுவாயொ என்ற
ஏக்கம் மறுபுறம் .........
இதற்கிடையில் நீதான் பார்க்க மாட்டாய் நானாவது
பார்த்துவிட்டு மடிகிறேன் என்று பொங்கி வந்த என்
கண்ணீரை, எப்போது கை தருவான் என்று பார்த்திருந்த
என் கரங்கள் "என்னை தொடமுன் உன்னை துடைக்க
விட்டுவிடுவேனா என்று வீறாப்பாய் துடைத்தெறிந்தது
எல்லாமே தமக்குள் போர் செய்தலும்
என் நிலையை நாவாவது எடுத்துச் சொல்லும்
என்றிருந்தேன். ஏமாற்றியது அதுவும்.
எந்த வார்த்தையும் வரவில்ல உன் பெயரை தவிர
நான் உன் பெயரை சொல்ல என் தந்தை
என் பெயரை சொல்ல சரியாக இருந்தது.
நிழலாய் எனை நீ தொடர்வாய் இரவும் பகலும் என
நானும் நகர்த்த முயன்றேன் வேர் விட்ட என் கால்களை
காதலித்தவர்களே.........
காதலிப்பவர்களே..........
இதுதான் காதலா............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக