skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு

காதலுக்கு......

கட்டி வைத்த என் கனவுலகத்துக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன்...........

வெள்ளி, 4 டிசம்பர், 2009

சொந்த மண்ணை தொட்ட போது.....

கோயிலடி என்று இறக்கிவிட்டான் BUS நடத்துனர்.
இறங்கிய எனக்கு என் வீட்டை
 ஆலமரம் காட்டிக்கொடுத்தது.
கால்களில் முள் தைத்ததைக்கூட
பொறுப்பெடுக்காமல் நடந்து நெருங்கினேன்
என் வீட்டை பழைய நினைவுகளுடன்.

வாசலில் வரவேற்ற வேப்பைமரத்தில்
என்பெயரைப் பார்த்ததும்
கையில் பிரம்பெடுத்து துவாயில்
சேலை கட்டி எனக்குத்தெரிந்த
டிப்லோமா A,B,C,D யை அந்த
சின்ன வேப்பை மரத்திற்கு அடித்தடித்து
சொல்லிக்கொடுத்ததை நினைத்து சிரித்தபடி
 நுழைகின்றேன் வாயிற் கதவை திறந்தபடி

அன்பாய் யாரோ என் தோள்களை
தொட்டு செல்ல திரும்பிப் பார்க்கின்றேன்.
ஆசையாய் ஊஞ்சல் கட்டி ஆட
இடம் தந்த ஆல மர மாமா.
நான் தேன் குடித்த எக்ஸ்சோறா மலர்கள்,
முடியே இல்லாத காலத்தில் மலர்
கொடுத்த மல்லிகை பந்தல் எல்லாமே
பற்றைக்காடாய்



சிப்பிக்குள் இருக்கும் முத்தை எடுத்த
 பின் யாரும் சிப்பியை கவனிப்பதில்லை
என்று என்னயே பரிதாபமாய் பார்த்துக்கொன்டிருந்தத
 என் பாழடைந்த வீட்டு தூண்களை
பிடித்தபடி உள் நுழைகின்றேன்.
திறந்ததும் கதவின் பின்னால் ஒளிந்து
நின்று பூச்சாண்டி காட்டவேண்டும் போல்
இருந்தது என் பழைய பழக்கத்தில்.
ஆனால் தனியே நின்று கொண்டு
என் விதி செய்த பூச்சாண்டியை நினைத்துக்கொள்கின்றேன்..

நின்ற படியே நோட்டம் விடுகின்றேன்.....
எப்போதும் துங்கும் என் பாட்டிக்கு
மட்டுமே சொந்தமாயிருந்த சாய்
மனக்கதிரை இப்போது சிலந்திக்கு
மட்டுமே சொந்தமாய
.
தங்கத்தால் அலங்கரித்த கலண்டர்
பெண்னை பார்த்து தென்னோலையால்
நகையணிந்து நான் எடுத்த போட்டோ,
மழை நீரை சேகரிக்க எனக்குதவிய என்
குடை இரன்டும் ஒரு மூலையில் கிடந்தது.
கார்த்திகையில் இரவிரவாய் கண்
விழித்து அணையாமல் பார்த்திருக்கும்
அதே சிட்டி விளக்கு அதே
யன்னல் ஒரத்தில் இன்னமும்.
எட்டி பார்க்கிறேன் வெளியெ.


மீன் குஞ்சென்று பத்திரமாய்
பிடித்து வந்து தவளை குஞ்சு
வள்ர்த்த தண்ணீ துரவில்
வெறும் புல்லுகள் மட்டும்
என் மனதை போல.

ஆணா பெண்ணா போட்டு பார்த்த
 புல்லு பூக்கள்,
ஒட்டிப்பர்த்த சோளன் தாடி,
படுத்ததும் கீறிப்பர்த்த கரி மேசை,
அடுப்படியில் சீனி களவெடுக்க
திட்டம் தீட்டிய தீப்பெட்டி தொலை பேசி.
இப்படி நாலா பக்கமும்
நினைவுகள் நிளலிட மணிச்சத்தம்
 கேட்டு திரும்பிப் பார்க்கிறேன்.

பிற்ந்த நாளுக்குக்கு நான்
கழுத்தில் கட்டிவிட்ட மணியிடனும்,
வாயில் நான் வளியில் தவற
விட்ட PASSPORT உடனும் வந்து
என் காலடியில் நின்றது என்
வீட்டு நாய் ரோபோ.
மனதின் வார்த்தைகளை சொல்ல
முடியவில்லை என் பெலன்
முடியும் வரை அழுது முடித்தேன்
என் ரோபோவைக் கட்டிபிடித்து.

பட்டாம் பூச்சியை பெட்டிக்குள்
போட்டு நேரத்திற்கு சொர்க்கத்தை காட்டினாலும்
சில நாட்களில் செத்தது ஏன்
என்று அப்போது புரிய வில்லை
இப்போது புரிந்து கொண்டேன்.


Posted by விமலரூபன் at 10:08 PM இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
Labels: சொந்த மண்ணை தொட்ட போது.....

2 கருத்துகள்:

mvalarpirai சொன்னது…

Super ~ Rasithen.. Last line is awesome !

8 டிசம்பர், 2009 அன்று 4:28 AM
விமலரூபன் சொன்னது…

நன்றி.

8 டிசம்பர், 2009 அன்று 9:06 PM

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

இலங்கை நேரம்

Blogger இயக்குவது.

இதுவரை செதுக்கியவை

  • 01.நிலா முற்றம்.... (1)
  • 01.விடை தேடுகின்றேன்........... (1)
  • 02.என் காதலனுக்கு மட்டும்...... (1)
  • 03.இன்னுமா புரியவில்லை???????? (1)
  • 04.வரைந்தது கவிதை அல்ல உன் முகம் என்னும் ஓவியம் (1)
  • 05.முதற்பார்வை........................ (1)
  • 06.மலர் அர்ச்சனை (1)
  • 07.உன் கூட்டில் (1)
  • 08.நினைவுகளால் வாழ்கின்றேன்... (1)
  • 09.என்னுள் நீ (1)
  • 10.காதல் உலகில் இது விசித்திர வழக்கமா...... (1)
  • 11.செல்லிட தொலைபேசி (1)
  • 12.காலையில் வந்த அழைப்பு... (1)
  • 13.பார்த்ததும் பிடித்தது (1)
  • இதுவும் கதலா..... (1)
  • உனை மறக்க வேண்டாம் என்று (1)
  • என் அன்பானவழுக்கு... (1)
  • என் பயணத்தில்...................... (1)
  • காத‌லிக்கும் ச‌கோத‌ர‌னாக‌........... (1)
  • சிரிக்கலாம் வாங்க...( (1)
  • சின்ன‌தாய் சில‌ ஆசைக‌ள் (1)
  • சொந்த மண்ணை தொட்ட போது..... (1)
  • நீ வருவாயா...... (1)
  • நீ வருவாயென‌ (1)
  • புரியவில்லையா இன்னும் உனக்கு... (1)
  • மொழி பேசும் விழிகள் (1)
  • வாழவிடு இல்லை சாக விடு...... (1)
  • விடை கூறு (1)
  • RING TONE (1)

உருவாக்கம்

எனது படம்
விமலரூபன்
செட்டிபாளையம்,, மட்டக்களப்பு
கவிதையை செதுக்க சிற்பியாக இல்லையேனும் ஒரு சிறிய உளியாக..
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இன்றைய படம்

இன்றைய படம்
மடு தேவாலயம்,மன்னார்,இலங்கை

Online Users

 
(c) Copyright 2010 காதலுக்கு....... Designed by Blogspot Templates
Supported by Video Game Music, Website Hosting, VPS Hosting